Oray Muraithan |
|---|
ஒரே முறைதான்
உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா
போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
ஒரே முறைதான்
உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா
போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
ஒரே முறைதான்
வானம் பார்த்த பூமியின் மேலே
மழை என விழுந்தாயே
நீலம் பூத்த விழிகளினாலே
நீ எனை அழைத்தாயே
வானம் பார்த்த பூமியின் மேலே
மழை என விழுந்தாயே
நீலம் பூத்த விழிகளினாலே
நீ எனை அழைத்தாயே
வசந்த காலப் பூக்களின் மேலே
வண்டென அமர்ந்தாயே
அமர்ந்த வண்டு பறந்து விடாமல்
ஆசையில் அணைத்தாயேஓஹோஹோ
ஒரே முறைதான்
உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா
போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
ஒரே முறைதான்
காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்
காதல் சுவையாகும்
கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்
கல்லும் மலராகும்
ஆஆஅஆஅ
காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்
காதல் சுவையாகும்
கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்
கல்லும் மலராகும்
பொல்லா மனதில் ஆசை புகுந்தால்
பொழுதும் பகையாகும்
புல்லாங்குழலில் காற்று நுழைந்தால்
புதுப்புது இசையாகும்
ஒரே முறைதான்
உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா
போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
இருவர் : ஒரே முறைதான்
உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ம்ம்ம்ம்ம்ம்ஹும்
ம்ம்ம்ம்ம்ஹும்ம்ம்ம்ம்
