Ore Oru Oorilae |
---|
ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு அய்யா ஒரே
ஒரு அய்யாவுக்கு ஒரே
ஒரு அம்மா ஒரே ஒரு
அம்மா பெத்தா ஒரே ஒரு
பொண்ணு அவ பொண்ணு
இல்ல பொண்ணு இல்ல
கடவுளோட கண்ணு
ஐயா இருக்காரே
ஐயா பாசம் இல்லாம
பலரு பைத்தியமா
ஆனதுண்டு பாசத்தினாலே
இவரு பைத்தியமா ஆவதுண்டு
காத்தடிச்சா மகளுக்கு
காவலுக்கு நிப்பாரு காச்சடிச்ச
சூரியன கைது செய்ய பாப்பாரு
மக மட்டும் மக
மட்டும் உசுரா மத்ததெல்லாம்
மத்ததெல்லாம் இவருக்கு கொசுரு
ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு அய்யா ஒரே
ஒரு அய்யாவுக்கு ஒரே
ஒரு அம்மா
அக்கா இருக்காங்களே
எங்க அக்கா பூச்சிய பாத்தாலே
சிலரு புத்தி மாறி போவாங்க
பூகம்பமே வந்தாலும் அக்கா
பூத்தொடுத்து நிப்பாங்க
கொண்டதுவும் ஒரு
குழந்தை கொடுத்தவணும்
ஒரு குழந்தை தொலையட்டும்
கழுதைங்கன்னு தொல்லை
எல்லாம் பொறுப்பாங்க
எங்கக்கா எங்களுக்கு
பரிசா எங்கக்கா மனசோட
இமயமலை சிறுசு
தன நானா தும்
தனும் தனும் தனும்
தன நானா தும் தன
தும் தனனும் தன
நானா தும் தன தும்
தனனும் தன நானா
திர தும் தனனும் திகுரு
தன தும் தன தும்
தனனும் தன நானா
திர தும் தன தும்
தனனும் தகிட தன
தும் தன தும் தனனும்
தன தும் தன தும் தனனும்
அம்மா இருக்காளே
எங்க அம்மா பொறந்து வரும்
போதே சிலரு வரம் வாங்கி
வருவாங்க பொறந்து வரும்
போதே சிலரு வரம் தரவே
வருவாங்க
வரமா வந்தம்மா
வாஞ்சை உள்ள தங்கம்மா
சிட்டெரும்ப நசுக்காத
சிங்கம் தான் எங்கம்மா
மறு பிறவி
உண்டுன்னா எனக்கென்ன
வேணும் இந்த மகளுக்கும்
தாய்க்கும் நான் மகனாகவேணும்