Oru Chinna Manikuyilu |
---|
ஆஆஆஅஆஆ ஆஆஆஅஆஆ
ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஒரு பாக்கு வெத்திலையாம் அத மாத்திக் கொள்ளணுமாம் நல்ல நாள் குறிக்கணுமாம் அத நிச்சயம் செய்யணுமாம் அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்
ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
குக்குக்கு குக்குக்கு கூ குக்கு குக்கு கூ குக்குக்கு குக்குக்கு கூ குக்கு குக்கு கூ
கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பது போல் உன்னோடு கலந்திருக்க சாமி சொன்னதய்யா காற்றாக நான் கலந்து மூச்சாக உள்ளிருந்து உன்னோடு வாழ்ந்திருக்க வாழ்த்து சொல்லுதய்யா
கல்லான எம் மனச கரைச்சி விட்ட கட்டழகி கண்ணீர தொடச்சி அந்த சாமி தானே பொட்டழகி சொல்லாலே அம்பு எடுத்து கண்ணால குறி பார்த்ததும் பொல்லாத சாமி முன்னே சொல்லி என்னை இழுத்ததும்
சரியா தவறா அத நடத்திடும் தெய்வம் தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்
சிறு சிந்து சுமந்து வந்த காற்றும் இனிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஆஆஆஅஆஆ ஆஆஆஅஆஆ ஆஅஆஆ
பூவான பூவழகி பூப்போல தேர் வருமா சீரான ஊர்வலமா சீர் கொண்டு வருமா வெள்ளி மணி குலுங்க விளையாடும் பூங்கிளியாம் தங்க மணிச்சரமும் தான் கொண்டு வருமாம்
முத்தான நிலவொளியில் அன்பு குடிசை போடலாம் காற்றாக கவிதை பாடி நாமும் அங்கு வீசலாம் இல்லாத சுகங்கள் தேடி அலையும் இந்த உலகிலே நில்லாத பறவை போல போதும் என்று வாழலாம்
அன்பே அன்பே அதை நடத்திடும் தெய்வம் தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்
ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஒரு பாக்கு வெத்திலையாம் அத மாத்திக் கொள்ளணுமாம் நல்ல நாள் குறிக்கணுமாம் அத நிச்சயம் செய்யணுமாம்
அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்
ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே