Oru Jeevanthan Duet |
|---|
லல்ல லல்ல ல ல ல லா
லல்ல லல்ல ல ல ல ல லா
ச க ரி க ரி ப
ச க ரி ப ச க ரி ப கா
ச க ரி க ரி ப
ச க ரி ப ச க ரி ப கா
ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உனைச் சேருவேன் ஹோ ஓ ஓ
வேறாரும் நெருங்காமல்
மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
ஹாஆஅஆஅ
உனக்காகத்தான்
இந்த கீதாஞ்சலி
ஹாஆஅஆஅ
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும்
தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
ஹாஆஅஆஅ (4)
காவேரி கடல்சேர
அணைதாண்டி வரவில்லையோஹோ ஓ ஓ
ஆசைகள் அலைபாய
ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம்
இனி மதனோற்சவம்
ஹாஆஅஆஅ
வளையோசைதான்
நல்ல மணிமந்திரம்
ஹாஆஅஆஅ
நான்தானைய்யா நீலாம்பரி
தாலாட்டவா
ஹஹஹாநடுராத்திரி
ஸ்ருதியும் லயமும்
சுகமாய் இணையும் தருணம்
ஒரு ஜீவன்தான்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
உன் பாடல்தான்
ஹாஆஅஆ
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது