Oru Jeevanthan Female |
|---|
ஒரு ஜீவன்தான்
ஹாஆஅஆஅ
உன் பாடல்தான்
ஹாஆஅஆஅ
ஓயாமல் இசைக்கின்றது
ஹாஆஅஆஅஹாஆ
இரு கண்ணிலும்
ஹாஆஅஆஅ
உன் ஞாபகம்
ஹாஆஅஆஅ
உறங்காமல் இருக்கின்றது
ஹாஆஅஆஅஹாஆ
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
அம்மாஅம்மாஅம்மா
அம்மாஅம்மாஅம்மா
பார் அம்மா
ஹாஆஅஆஅ
பறவைக்கும்
ஹாஆஅஆஅ
பாசங்கள் இருக்கின்றதுஊஊ
பறந்தோடி
ஹாஆஅஆஅ
இரைத்தேடி
ஹாஆஅஆஅ
பிள்ளைக்கு கொடுக்கின்றது
சிறுப்பிள்ளை நான் செய்த பாவம் என்ன
ஹாஆஅஆஅ
என் மீதுதான் கொண்ட கோபம் என்ன
ஹாஆஅஆஅ
பாலூட்டத்தான் நீ இல்லையே
தாலாட்டத்தான் தாய் இல்லையே
அம்மா அம்மா
தனியாய் தவித்தேன் தனியே
ஒரு ஜீவன்தான்
ஹாஆஅஆஅ
உன் பாடல்தான்
ஹாஆஅஆஅ
ஓயாமல் இசைக்கின்றது
ஹாஆஅஆஅஹாஆ
ஹாஆஅஆஅ(4)
நீ தானே
ஹாஆஅஆஅ
பல மாதம்
ஹாஆஅஆஅ
மடி மீது
சுமந்தாய் அம்மாஆஅஆ
நான் வந்து
ஹாஆஅஆஅ
உனைத்தேட
ஹாஆஅஆஅ
மறைவாக இருந்தாய் அம்மா
நான்தானம்மா உந்தன்
பிள்ளைச் செல்வம்
ஹாஆஅஆஅ
நீதானம்மா எந்தன்
பேசும் தெய்வம்
ஹாஆஅஆஅ
காணாமலே தொழுவேன் அம்மா
கண்டேன் இன்று அழுதேன் அம்மா
அம்மா நீதான்
அணைத்தால் அதுதான் இன்பம்
ஒரு ஜீவன்தான்
ஹாஆஅஆஅ
உன் பாடல்தான்
ஹாஆஅஆஅ
ஓயாமல் இசைக்கின்றது
ஹாஆஅஆஅஹாஆ
இரு கண்ணிலும்
ஹாஆஅஆஅ
உன் ஞாபகம்
ஹாஆஅஆஅ
உறங்காமல் இருக்கின்றது
ஹாஆஅஆஅஹாஆ
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
அம்மாஅம்மாஅம்மா
அம்மாஅம்மாஅம்மா