Oru Kaadhal Raagam |
---|
ஒரு காதல் ராகம் நான் பாடுவேன் உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்
நிலவே மலரே உயிரே உறவே என்னை நெருங்கி வா உனைத்தான் நினைத்தேன் மனதை கொடுத்தேன் சொந்தம் கொண்டு வா
ஒரு காதல் ராகம் நான் பாடுவேன் உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்
நிலவே மலரே உயிரே உறவே என்னை நெருங்கி வா உனைத்தான் நினைத்தேன் மனதை கொடுத்தேன் சொந்தம் கொண்டு வா
ஒரு காதல் ராகம் நான் பாடுவேன் உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்
வானமென்னும் பாதை தன்னில் ஓடும் நிலவே எந்தன் நெஞ்சில் என்றும் தோன்றும் உந்தன் முகமே தென்றல் வந்து தீண்டும் இன்பம் கோடி சுகமே சொந்தமாக நான் பாடும் புதிய ராகமே
கண் இமைக்காத விழிகள் மன்மதன் தொடுத்த கணைகள் தேன் சிந்தும் இதழ்கள் மெல்ல அது பேசும் மொழிகள் பாவையே பேதையே என் ராதையே
ஒரு காதல் ராகம் நான் பாடுவேன் உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்
பூவைப் போல என்னைப் பார்த்து நீயும் சிரித்தாய் பார்வையாலே காதல் வலையை மெல்ல விரித்தாய்
பார்க்க பார்க்க நெஞ்சம் ஏங்க பழகத் துடித்தேன் பாவை உன்னைத் தானே நானும் தினமும் நினைத்தேன்
உன் முகம் பார்த்தேன் மானே என் விழிப் பூத்தேன் நானே உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கின்றேனே பாவையே பேதையே என் ராதையே
ஒரு காதல் ராகம் நான் பாடுவேன் உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்
நிலவே மலரே உயிரே உறவே என்னை நெருங்கி வா உனைத்தான் நினைத்தேன் மனதை கொடுத்தேன் சொந்தம் கொண்டு வா
ஒரு காதல் ராகம் நான் பாடுவேன் உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்