Oru Kaalam Varum |
---|
ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும் எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம் அதில் வீரம் வரும் புது வேகம் வரும் அன்று பூகம்பமே பூவில் தோன்றலாம்
ஓஓஓஒஓஒ ஓஓஓஒஓஒஓஹ்ஓஹ்
தன் வீடுண்டு வாழ்வுண்டு என எண்ணி வாழ்வார்கள் நம் நாடென்று பாராமல் கண் மூடி போவார்கள் அவர் வாழ்ந்தென்ன லாபம் இந்த மண்மீது பாரம்
அட எல்லோரும் ஒன்றே எனச் சொல்வார்கள் இங்கே இவையெல்லாமே வேதம் ஆமாம் போங்கடா
ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும் எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம்
சிலர் ஊராரின் தோள் மீது ஊர்கோலம் போவார்கள் பலர் ஏனென்று கேளாமல் ஏமாந்து போவார்கள்
ஒரு பூங்காற்று நாளை ஒரு புயலாக கூடும் ஒரு நதி கூட நாளை எரிமலையாக மாறும் அது பஞ்சாங்கம் பார்த்தா மாறப்போகுது
ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும் எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம் அதில் வீரம் வரும் புது வேகம் வரும் அன்று பூகம்பமே பூவில் தோன்றலாம்