Oru Kaalathula Kadhal |
---|
ஒரு காலத்துல காதலுன்னா ரொம்ப புனிதமானது
ஒரு காலத்துல காதலுன்னா ரொம்ப புனிதமானது இந்தக் காலத்துல அது பொழுது போக்கா ஆகிப் போனது
இரு மனசும் ஒரு மனசா அன்று எணஞ்சு இருந்தது அருகருகே இருந்தாலும் இன்று வெலகி இருக்குது இது காதலாகுமா நெசமானதாகுமா
தந்தனத் தானா தந்தனத் தானா காதலுன்னா இது தானா தந்தனத் தானா தந்தனத் தானா காதலே வேணா போண்ணா
ஒரு காலத்துல காதலுன்னா ரொம்ப புனிதமானது இந்தக் காலத்துல அது பொழுது போக்கா ஆகிப் போனது
கண் எழுதும் மை எல்லாம் பொய்க்குத்தான் அடையாளம் அது பொய்க்குத் தான் அடையாளம் பூவுக்கொரு வாய் இருந்தா உண்மையத்தான் அது பேசும் அந்த உண்மையத்தான் அது பேசும்
புன்னை மரம் சொல்லுமடி அன்று கண்ட உண்மைக் கதை கண்களிலே பேசிப் பேசி கை இணைந்த காதல் கதை
சோலைக் குயில் சொன்னதெல்லாம் சொப்பனமாய்ப் போனதென்ன பாலை நிலா கண்டதெல்லாம் மாறிவிட்ட கோலம் என்ன இதை இவன் நினைத்திட அவள் மறந்திட நியாயம் என்ன
ஒரு காலத்துல காதலுன்னா ரொம்ப புனிதமானது இந்தக் காலத்துல அது பொழுது போக்கா ஆகிப் போனது
கன்னியர்கள் கை வசமாய் வைத்திருப்பதென்ன வித்தை அவர் வைத்திருப்பதென்ன வித்தை கண்ணைக் கட்டும் வித்தையைப் போல் காதல் என்னும் மாய வித்தை அந்தக் காதல் என்னும் மாய வித்தை
வாலிபரின் நெஞ்சை எல்லாம் வாட்டுவது வாடிக்கையோ வாடுவதை தேடுவதை பார்ப்பதுங்கள் வேடிக்கையோ
காதல் என்னும் விளையாட்டினிலே காளையை நீ ஏன் பிடித்தாய் வேறொருவன் கை பிடித்து வாழ்க்கையில் நீ ஏன் நடித்தாய் இதை நீ மறந்திட அவன் நினைப்பதில் நியாயம் என்ன
ஒரு காலத்துல காதலுன்னா ரொம்ப புனிதமானது இந்தக் காலத்துல அது பொழுது போக்கா ஆகிப் போனது
இரு மனசும் ஒரு மனசா அன்று எணஞ்சு இருந்தது அருகருகே இருந்தாலும் இன்று வெலகி இருக்குது இது காதலாகுமா நெசமானதாகுமா
தந்தனத் தானா தந்தனத் தானா காதலுன்னா இது தானா தந்தனத் தானா தந்தனத் தானா காதலே வேணா போண்ணா
ஹேய் தந்தனத் தானா தந்தனத் தானா காதலுன்னா இது தானா தந்தனத் தானா தந்தனத் தானா காதலே வேணா போண்ணா