Oru Kodi Pizhai Seithavan |
---|
ஒரு கோடி பிழை செய்தவன் நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன் ஒரு கோடி பிழை செய்தவன் நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன் தானென்னும் தருக்கேறி தடுமாறினேன் தெய்வத்தை மதிக்காமல் தடம் மாறினேன் பெரும்பாவி கொடும்பாவி நான்தானே
ஒரு கோடி பிழை செய்தவன் நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன்
பொற்புடை மாதர் கற்பினை நாளும் பொடிப் பொடியாக்கியவன் நல்ல பாம்புகள் வாழும் புற்றுகள் யாவும் தீக்கிரையாக்கியவன்
பொற்புடை மாதர் கற்பினை நாளும் பொடிப் பொடியாக்கியவன் நல்ல பாம்புகள் வாழும் புற்றுகள் யாவும் தீக்கிரையாக்கியவன்
தலை முதல் கால் வரை கடும் விஷம் ஏற துடித்தேன் புழுவாக தாய்க்கொரு தாயென தோன்றிய தயவே வருவாய் விரைவாக போதுமே சோதனை நான் படும் வேதனை போதுமே சோதனை நான் படும் வேதனை
ஒரு கோடி பிழை செய்தவன் நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன்
நாத்தழும்பேற நாத்திகம் பேசி நாய் போல் அலைந்தேனே அறியாத சிறுப்பிள்ளை இவனல்லவோ
நால்வகை வேதம் நாடிய பாதம் இதுதான் அறிந்தேனே இனி என்னை நீ காக்க தடை என்னவோ
அறங்கூறும் தாயே என் அபிராமியே சபையேறி ஆடும் நல் சிவகாமியே ஓம் எனும் நாதமே சரணம் உன் பாதமே ஓம் எனும் நாதமே சரணம் உன் பாதமே
ஒரு கோடி பிழை செய்தவன் நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன் தானென்னும் தருக்கேறி தடுமாறினேன் தெய்வத்தை மதிக்காமல் தடம் மாறினேன் பெரும்பாவி கொடும்பாவி நான்தானே தாயே வாதயவே வா