Oru Kodi Sugam Vanthathu |
---|
இசை அமைப்பாளர் : கே வி மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு
பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது ஒவ்வொன்றும் நீ தந்தது ஒரு கோடி சுகம் வந்தது அது ஒவ்வொன்றும் நீ தந்தது இது புது உறவு இன்று முதலிரவு அதில் மனநிறைவு நீ தந்தது
ஆண் : ஒரு கோடி சுகம் வந்தது அது ஒவ்வொன்றும் நீ தந்தது இது புது உறவு இன்று முதலிரவு அதில் மனநிறைவு நீ தந்தது பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது ஒவ்வொன்றும் நீ தந்தது
விழி வானம் உனை தேட தளிர் மேனி தள்ளாட தேன் சிந்தும் பெண்மையல்லவோ வருங்கால நிலையென்னும் சிருங்கார கலையன்னம் இளமைக்கு தூது செல்லவோ
பெண் : மலர் சிரிப்பதென்ன மஞ்சம் அழைப்பதென்ன மனம் கேட்பதென்ன அதை நான் சொல்லவோ ஒரு கோடி சுகம் வந்தது அது ஒவ்வொன்றும் நீ தந்தது
ஆண் : கணக்கின்றி கிடைத்தாலும் கண்மூடி ரசித்தாலும் அடங்காத தாகமல்லவோ விளக்கின்றி படித்தாலும் விடிந்தாலும் தொடர்ந்தாலும் இனிக்கின்ற கதையல்லவோ
பெண் : இன்பம் தொடர் கதையோ நெஞ்சை தொடும் கதையோ அதை படிப்பதற்கு நான் துணை வரவோ ஆண் : ஒரு கோடி சுகம் வந்தது அது ஒவ்வொன்றும் நீ தந்தது
பெண் : தளராத நெஞ்சோடு தன்மான பண்போடு நான் கண்ட ஜெயம் அல்லவோ ஆண் : வளமான எதிர்காலம் வரவேற்க உன்னோடு நான் கண்ட வழியல்லவோ
பெண் : உன்னை வாழ்த்தட்டுமா ஆண் : என்னை வழங்கட்டுமா பெண் : அதில் மயங்கட்டுமா ஆண் : உலகை மறக்கட்டுமா
பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது ஒவ்வொன்றும் நீ தந்தது இது புது உறவு இன்று முதலிரவு அதில் மனநிறைவு நீ தந்தது
பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது ஒவ்வொன்றும் நீ தந்தது