Oru Nimisham

Oru Nimisham Song Lyrics In English


என் இராசாத்திக் கிளியே
இராசாத்திக் கிளியே
நான்தான் நாளெல்லாம்
தவமிருந்தேன்

நான் நம்பி கெடந்ததெல்லாம்
நம்பலயோ மனசு
இப்போ வெம்பி வதங்குதடி
வெறும் சருகா போனதடி
தெம்பும் கொறைஞ்சதடி
தெசையெல்லாம் மாறுதடி

நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் என் தாலி
ஒத்திக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெரும் வேலி

என் சின்னப் பசுங்கிளியே
சித்திரமே இரத்தினமே
என்னத் தவிக்கவிட்டு
எப்படிதான் வாழுவியோ
கண்ணங்கதப்புக்குள்ளே
காணாம எனை தொலைச்சேன்
என்னதான் மீட்டுத்தார
எந்த சாமி வரம் கொடுக்கும்
எந்த சாமி வரம் கொடுக்கும்

நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் என் தாலி
ஒத்திக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெரும் வேலி


என் சாதி சனம் தடுத்திருந்தா
சத்தியமா கொன்னுருப்பேன்
மோதி சண்ட போட்டுப்புட்டு
மூச்சடக்கிப் போயிருப்பேன் ஆ

பாவி மகளே
நீ பாதியிலே கொன்னுப்புட்ட
ஆவி துடிக்குதடி
அத்தனையும் அந்ததடி
அத்தனையும் அந்ததடி

நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் என் தாலி
ஒத்திக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெரும் வேலி