Oru Padalai Pala Ragathil |
---|
இசை அமைப்பாளர் : ஜி கே வெங்கடேஷ்
ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன் ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன் பல ஜென்மங்கள் உனைத் தேடினேன் இன்று நேரில் காண்கிறேன்
ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன்
எந்தன் பாதையில் இந்த தேவதை குரல் ஓசை கேட்கிறேன் உந்தன் ஞாபகம் வரும் போதெல்லாம் நான் வானில் பறக்கிறேன் விழி மோகனம் தரும் மந்திரம் விழி மோகனம் தரும் மந்திரம் அது மோக காவியம்
ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன்
பனி மல்லிகை மண மோகினி உனை மறக்க முடியுமோ ஓராயிரம் கவி பாடினும் இதை ஈடு செய்யுமோ ஏழுலகமும் சென்று தேடினும் ஏழுலகமும் சென்று தேடினும் இதை காணக் கூடுமோ
ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன்
மழைக்காலங்கள் வரும் வேளையில் உனை மேகம் ஆக்குவேன் இளம் கோடையில் எந்தன் ஜாடையில் உனைத் தென்றல் ஆக்குவேன் என் நெஞ்சமே ஒரு ஆலயம் என் நெஞ்சமே ஒரு ஆலயம் உனை தெய்வம் ஆக்குவேன்
ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன் பல ஜென்மங்கள் உனைத் தேடினேன் இன்று நேரில் காண்கிறேன்
ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன்