Oru Poovai Pondra |
---|
ஆஅஆஹாஹாஆ ஆஆஆ ஆஅஆஹாஹாஆ ஆஆஆ ஆஅஆஹாஹாஆ ஆஅஆஹாஹாஆஆஆஆ
ஒரு பூவை போன்ற பூவை இவள் இன்று பூஜை மலரானாள் தினம் தேயும் நிலவாய் தேய்ந்த மகள் இன்று கோவில் விளக்கானாள் திருக் கோயில் விளக்கானாள்
வானம் பூமி வாழ்த்துரைக்க புது கானம் பாடுகிறாள் மாலை சூடும் மன்னவனின் திரு மார்பில் ஆடுகிறாள் திரு மார்பில் ஆடுகிறாள்
மாதொரு முத்துச்சரம் நாளொரு அத்திப்பழம் தேனில் குழைக்கின்றாள் நானவள் பக்கம் வர நால்வகை வெட்கம் வர தேகம் கொதிக்கின்றாள்
காதலன் பத்து தரம் கை தொட விட்டு தரும் காலம் பிறக்காதோ கோவலன் அன்பை பெறும் மாதவி அந்தப்புரம் வாசல் திறக்காதோ
நம் உறவுகள் மலர்ந்தது கண்ணாலே இன்ப உலகங்கள் தெரிந்தது பெண்ணாலே என் பொழுதுகள் புலர்ந்தது உன்னாலே ஆசை விழுதுகள் வளர்ந்தது தன்னாலே
வானம் பூமி வாழ்த்துரைக்க புது கானம் பாடுகிறாள் மாலை சூடும் மன்னவனின் திரு மார்பில் ஆடுகிறாள் திரு மார்பில் ஆடுகிறாள்
ஆஅஆஹாஹாஆ ஆஅஆஹாஹாஆஆஆஆ
நாயகன் தொட்டுத் தர நாயகி விட்டு தர காதல் விளையாட்டு நானொரு முத்தம் தர நீயதை நித்தம் தர மானே தலையாட்டு
நாடுது இச்சைக்கிளி நாணுது பச்சக்கிளி மோகம் தணியாதோ ஆசையில் உள்ளம் வர ஆனந்த வெள்ளம் வர ஆடை நனையாதோ
என் உணர்ச்சிகள் எழுந்தது இப்போது நான்கு உதடுகள் இணைவது எப்போது என் உருவமும் பருவமும் என்னாகும் உந்தன் விரல் பட விரல் தொட புண்ணாகும்
ஒரு பூவை போன்ற பூவை இவள் இன்று பூஜை மலரானாள் மாலை சூடும் மன்னவனின் திரு மார்பில் ஆடுகிறாள் ஆஆ திரு மார்பில் ஆடுகிறாள்