Oru Vanavil Pole

Oru Vanavil Pole Song Lyrics In English


ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்

ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்

ஒரு வானவில்

வளர் கூந்தலின் மணம் சுகம்
இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில்
புது ராகம் பாடவா

மடி கொண்ட தேனை மனம் கொள்ள
வருகின்ற முல்லை இங்கே
கலைமானின் உள்ளம் கலையாமல்
களிக்கின்ற கலைஞன் எங்கே

கலைகள் நீ கலைஞன் நான்
கவிதைகள் பாடவா

ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்


ஒரு வானவில்

உனக்காகவே கனிந்தது
மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது
கலைக் கோயில் மல்லிகை

இனிக்கின்ற காலம் தொடராதோ
இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ
இனியெந்தன் வாழ்வும் உனது

தொடர்கவே வளர்கவே
இது ஒரு காவியம்

ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
ம்ம்ம்ம்ம்ம்ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ம்ம் ம்ம்ம்