Othaiya Rettaiyaa |
---|
கங்கை அமரன்
ஒத்தையா ரெட்டையா மொத்தமா ஒன்று சேர்ந்து வரணும் துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே வெற்றியினை தரணும்
பெட்டைக்கோழி ஒண்ணு சபதம் போடுது கொல்லி மலையிலே நத்தாங்கூடு ஒண்ணு விரதம் காக்குது நண்டு வலையிலே
ஒத்தையா ரெட்டையா மொத்தமா ஒன்று சேர்ந்து வரணும் துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே வெற்றியினை தரணும்
பட்டுக்கோட்ட பாட்ட புது ராகம் போட்டு நீட்ட வந்திருக்கு நேரம் இதை எல்லாரும் கொண்டாட வேணும்
பாவலரப் போல பல நூறு மேடை காண வாடா சின்ன தம்பி நீ வந்தா குளிரும் என் நெஞ்சு
நம்ம பாட்டாளி பேரால பல்லாங்குழி ஆடி கூத்தாடி விக்கிறான்டா நாட்ட இதச் சொல்லி எழுத வேணும் பாட்ட
ஒத்தையா ரெட்டையா மொத்தமா ஒன்று சேர்ந்து வரணும் துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே வெற்றியினை தரணும்
சாதி என்று சொல்லி ஒரு பாதியாகி போனோம் நீதி என்று சொல்லி தெரு நாயோட கூட்டாளி ஆனோம்
சித்தன் சொன்ன வாக்கு சுடு சாம்பலாகி போச்சு பக்தன் என்ற பேச்சும் புது கட்டாரி துப்பாக்கி ஆச்சு
நம்ம பாட்டாளி எல்லாரும் கூட்டாளி ஆகாமல் நேராதடா ஒரு மாற்றம் நீ செத்தாலும் கிட்டாது மோட்சம்
ஒத்தையா ரெட்டையா மொத்தமா ஒன்று சேர்ந்து வரணும் துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே வெற்றியினை தரணும்
பெட்டைக்கோழி ஒண்ணு சபதம் போடுது கொல்லி மலையிலே நத்தாங்கூடு ஒண்ணு விரதம் காக்குது நண்டு வலையிலே
ஒத்தையா ரெட்டையா மொத்தமா ஒன்று சேர்ந்து வரணும் துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே வெற்றியினை தரணும்