Oviyam Theettiyavan

Oviyam Theettiyavan Song Lyrics In English


ஆஆஆஹ்ஆஆஹ் ஆஆஆஹ்ஆஆஹ்

ஓவியம் தீட்டியவன் ஒரு காவியம் தீட்டுகிறேன் என் மன வீணையிலே இன்று உன் பெயர் மீட்டுகிறேன் உயிர் தங்கைக்காக அன்பு கங்கைக்காக ஒரு தெய்வ ராகம் இசைப்பேன்

இடைவெளி இல்லாது இடையினில் நில்லாது பிறவி முழுதும் தொடரும் உறவு இதுவல்லவோ

ஓவியம் தீட்டியவன் ஒரு காவியம் தீட்டுகிறேன் என் மன வீணையிலே இன்று உன் பெயர் மீட்டுகிறேன்

நதியோடு போகும் வளையாத ஆறும் விதியோடும் நாளும் நடந்தேன் எதிர்காலம் என்ன வழிக்காட்டும் என்று புதிரோடு இங்கு கிடந்தேன்

நடைபாதை ஓரம் கனிவோடு தெய்வம் நிழல் தந்த நேரம் சிலிர்த்தேன் நிஜமான அன்பு உருவான பின்பு புதிதாக மீண்டும் துளிர்த்தேன்

கண்ணில் என் கண்ணில் அன்பு தங்கையின் வண்ணங்களே நெஞ்சில் என் நெஞ்சில் அந்த தங்கத்தின் எண்ணங்களே

கண்மணியேஏகருமணியேஏ பொன்மணியேஏபூமணியேஏ நலம் பெற எந்நாளும் உனக்கென பண்பாடும் எனது மனதும் எனது உயிரும் உனதல்லவோ


ஓவியம் தீட்டியவன் ஒரு காவியம் தீட்டுகிறேன் என் மன வீணையிலே இன்று உன் பெயர் மீட்டுகிறேன்

படம் ஒன்று போட்டு பரிசொன்று வாங்க இடம் தந்த பாவை ஒருத்தி அதற்காக நாளும் இசை பாட வேண்டும் அவள் பேரை நெஞ்சில் நிறுத்தி

நமை போன்று ஏழை இருள் நீங்கி வாழ சிறு தீபம் ஒன்றை பொருத்தி ஒளி தந்த பெண்ணை துதி செய்ய வேண்டும் மனக் கோயில் தன்னில் இருத்தி

இன்பம் நல் இன்பம் இங்கு வந்தது வாசலிலே ஞானம் கலை ஞானம் இன்று வென்றது வேளையிலே

தண்ணிலவேஏபெண்ணிலவேஏ தங்கை எனும்ம்ம்பொன் நிலவேஏ வெளுத்தது நம் வானம் எழுந்தது பூபாளம் இதயம் முழுதும் புதிய வெளிச்சம் பரவியதே

ஓவியம் தீட்டியவன் ஒரு காவியம் தீட்டுகிறேன் என் மன வீணையிலே இன்று உன் பெயர் மீட்டுகிறேன் உயிர் தங்கைக்காக அன்பு கங்கைக்காக ஒரு தெய்வ ராகம் இசைப்பேன்

இடைவெளி இல்லாது இடையினில் நில்லாது பிறவி முழுதும் தொடரும் உறவு இதுவல்லவோ