Palootta Thaayillaiya

Palootta Thaayillaiya Song Lyrics In English


ஆராரோ ஆரிரரோ நீ யாரோ தாய் யாரோ இதில் உண்மையை யார் அறிவாரோ

பாலூட்ட தாயில்லையா உன் தாய்ப் போல நானில்லையா பாலூட்ட தாயில்லையா உன் தாய்ப் போல நானில்லையா

நெஞ்சில் இடம் மாறி விளையாடும் தென்றலே தேய்ப்பிறை ஏதும் அறியாத திங்களே

அன்பு பாலூட்ட தாயில்லையா உன் தாய்ப் போல நானில்லையா

ஈரைந்து மாதங்கள் தாங்கி மடி தாங்கி இடை நோக மேல் மூச்சு வாங்கி தினம் வாங்கி ஒரு தாய்க்கு மகளாக வந்தாய் இங்கு மறு தாய்க்கு மகளாகி நின்றாய் இங்கு மறு தாய்க்கு மகளாகி நின்றாய்

உனக்கு பாலூட்ட தாயில்லையா உன் தாய்ப் போல நானில்லையா

ஒரு நாய்க்கும் தாயாகும் உள்ளம் அன்பு வெள்ளம் கருணைக்கு பொருள் என்ன சொல்லும் இவள் இல்லம் தாய்மைக்கு கிடையாது பேதம் என்றும் அதுதானே தரமான வேதம் என்றும் அதுதானே தரமான வேதம்


உனக்கு பாலூட்ட தாயில்லையா உன் தாய்ப் போல நானில்லையா

ஒரு பேரு நீ பெற்ற பேரு அரும் பேரு உன் தாய் தந்தை இவரென்று கூறு வேறு யாரு எடுத்தாலும் வளர்த்தாலும் தாய்தான் நீ என்றென்றும் இவளன்பு சேய்தான் நீ என்றென்றும் இவளன்பு சேய்தான்

உனக்கு பாலூட்ட தாயில்லையா உன் தாய்ப் போல நானில்லையா

நெஞ்சில் இடம் மாறி விளையாடும் தென்றலே தேய்ப்பிறை ஏதும் அறியாத திங்களே

உனக்கு பாலூட்ட தாயில்லையா உன் தாய்ப் போல நானில்லையா