Pani Mazhai Vizhum |
---|
பனி மழை விழும் பருவக் குளிர் எழும் பனி மழை விழும் பருவக் குளிர் எழும் சில்லென்ற காற்றாட சேர்ந்த மனம்தான் ஆட கனவுகளின் ஊர்கோலமோ
பனி மழை விழும் பருவக் குளிர் எழும்
மாறாத காதலுக்கு தூது செல்லுதே பூ மேகமே பூவான காதலிக்கு சேதி சொல்லுதே என் மோகமே
வா வா அன்பே தா தா என்பேன் நீரோடைப் போல் ஓடும் நெஞ்சோடு காதல் இராகம் காதில் கேட்கும் கல்யாண தாளம்
பனி மழை விழும் பருவக் குளிர் எழும்
நீங்காமல் வாழுகின்ற காலம் எண்ணுதே என் உள்ளமே நெஞ்சோடு சேருகின்ற ஆசைக் கொண்டதே பெண் உள்ளமே
வா வா இன்று நீ தா தா ஒன்று எங்கெங்கும் தேவ கானம் என்னுள்ளில் காணும் மோனம் வாழும் காலம் உன்னோடு சேரும்
பனி மழை விழும் பருவக் குளிர் எழும் சில்லென்ற காற்றாட சேர்ந்த மனம்தான் ஆட கனவுகளின் ஊர்கோலமோ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்