Panimalar Neeril Aadum

Panimalar Neeril Aadum Song Lyrics In English


பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே

நினைவுகள் கோலம் போடும் இளமை குலுங்கும் தங்க ரதமே பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே



எண்ணங்கள் இனிக்கட்டுமே வண்ணங்கள் மலரட்டுமே வாலிபம் சிரிக்கட்டுமே வாழ்க்கையில் தொடரட்டுமே மகாராணி நான் மகராசி நான் மகாராணி நான் மகராசி நான் மனது போலவே வாழ்வு கிடைத்தது பார்க்கும் யாவையும் சுகம் சுகமே

பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே



கண்ணான கண்ணன் வந்தான் கண்ணோடு கண்ணை வைத்தான் பொன்னான புன்னகையில் பெண் என்னைத் தழுவிக் கொண்டான் மகாராணி நான் மகராசி நான் மகாராணி நான் மகராசி நான் இரவு போனது பொழுது விடிந்தது எனது நெஞ்சிலே சுகம் சுகமே

பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே

எல்லோரும் நினைப்பதில்லை நினைத்தாலும் கிடைப்பதில்லை கிடைத்தாலும் ரசிப்பதில்லை ரசித்தாலும் நினைப்பதில்லை மகாராணி நான் மகராசி நான் மகாராணி நான் மகராசி நான் நினைத்த யாவையும் உண்மையானது இறைவன் கருணையால் சுகம் சுகமே

பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே