Pathu Mathanthan |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பத்து மாதந்தான் அத்தனை பேரும் படைப்பினிலே என்ன பேதமடா பத்து மாதந்தான் அத்தனை பேரும் படைப்பினிலே என்ன பேதமடா
பள்ளம் மேடும் சமமாவதுதான் பகுத்தறிவு சொல்லும் வேதமடா பள்ளம் மேடும் சமமாவதுதான் பகுத்தறிவு சொல்லும் வேதமடா பகுத்தறிவு சொல்லும் வேதமடா
ஏற்றம் இறக்கம் என்பவை எல்லாம் எவனால் வந்ததடா எலும்பிலும் தோலிலும் ஜாதியின் பெயரை எழுதியதில்லையாடா
ஏற்றம் இறக்கம் என்பவை எல்லாம் எவனால் வந்ததடா எலும்பிலும் தோலிலும் ஜாதியின் பெயரை எழுதியதில்லையாடா
அள்ளிக் கொடுக்கும் வள்ளல்கள் எல்லாம் உயர்ந்த ஜாதியடா அள்ளிக் கொடுக்கும் வள்ளல்கள் எல்லாம் உயர்ந்த ஜாதியடா அன்று ஔவை சொன்னது என்றும் வாழும் சிறந்த நீதியடா
பத்து மாதந்தான் அத்தனை பேரும் படைப்பினிலே என்ன பேதமடா
நல்லவர் சிலபேர் பேதத்தை ஒழிக்க நாட்டினை ஆள்கின்றார் அவர் நன்மைகள் செய்து புரட்சிகள் நடத்தி சரித்திரம் ஆகின்றார்
நல்லவர் சிலபேர் பேதத்தை ஒழிக்க நாட்டினை ஆள்கின்றார் அவர் நன்மைகள் செய்து புரட்சிகள் நடத்தி சரித்திரம் ஆகின்றார்
சொல்லிலும் செயலிலும் மாறுபடாமல் தூயவராகின்றார் அந்தத் தூயவர்தானே கடவுள் அனுப்பிய தூதுவர் ஆகின்றார் தூதுவர் ஆகின்றார்
பத்து மாதந்தான் அத்தனை பேரும் படைப்பினிலே என்ன பேதமடா
ஈசன் என்பவன் நீரை தொட்டால் நீரும் குளிர்கின்றது அந்த நீரை போலே நெருப்பை தொட்டால் நெருப்பும் சுடுகின்றது
ஈசன் என்பவன் நீரை தொட்டால் நீரும் குளிர்கின்றது அந்த நீரை போலே நெருப்பை தொட்டால் நெருப்பும் சுடுகின்றது
ஈசன் என்பவன் படைத்த படைப்பில் எதுவும் தவறில்லை ஈசன் என்பவன் படைத்த படைப்பில் எதுவும் தவறில்லை நாம் இன்றைய பேதத்தை மாற்றாவிட்டால் எவருக்கும் வாழ்வில்லை
பத்து மாதந்தான் அத்தனை பேரும் படைப்பினிலே என்ன பேதமடா
பள்ளம் மேடும் சமமாவதுதான் பகுத்தறிவு சொல்லும் வேதமடா பகுத்தறிவு சொல்லும் வேதமடா