Pethu Potta Annai |
|---|
பெத்துப் போட்ட அன்னையும் உண்டு
பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு
இப்போது
இன்னும் பல சொந்தமும் உண்டு
கூட வர யாரிங்கு உண்டு
அப்போது
ஹோ மானிடா அழுவது ஏனடா
வாடி நிக்காதே இது வாடிக்கைதானே
ஆண்டவன் காட்டும் ஒரு வேடிக்கைதானே
பெத்துப் போட்ட அன்னையும் உண்டு
பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு
இப்போது
நாடகத்தில் எனக்கு
வேஷங்களைக் கொடுத்து
ஆடச் சொன்னான்டா
ஆட்டி வைத்தான்டா
வந்து விட்ட பிறகு
வாடி என்ன மனது
நூலில் நின்றாடும்
பொம்மை நானாகும்
உலகில் கிடையாது
இறவாத ஜீவன்
இருந்தால் அது இன்னும்
பிறவாத ஜீவன்
மெய் என்று மேனிக்கும்
பேர் வைத்தான்
மெய்யும் பொய்யாக
இந்த மெய்யும் பொய்யாக
ஆண்டவன் இடம்தான்
இது வாங்கிய கடன்தான்
பெத்துப் போட்ட அன்னையும் உண்டு
பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு
இப்போது
நம்முடைய கணக்கு
சாமி கையில் இருக்கு
கண்ணே கண்ணம்மா
பொன்னே பொன்னம்மா
வந்த வரை வரவு
சென்ற வரை செலவு
கண்ணே கண்ணம்மா
பொன்னே பொன்னம்மா
இனி நான் அழுதாலும்
சிரித்தாலும் ஒன்று
எதையும் சமமாக
நினைப்பேனே இன்று
தண்ணீரில் ஒட்டாத
எண்ணெய் நான்
கண்ணே கண்ணம்மா
அடி கண்ணே கண்ணம்மா
போதும் அம்மாடி
இங்கு உறவு கொண்டாடி
பெத்துப் போட்ட அன்னையும் உண்டு
பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு
இப்போது
இன்னும் பல சொந்தமும் உண்டு
கூட வர யாரிங்கு உண்டு
அப்போது
ஹோ மானிடா அழுவது ஏனடா
வாடி நிக்காதே இது வாடிக்கைதானே
ஆண்டவன் காட்டும் ஒரு வேடிக்கைதானே
பெத்துப் போட்ட அன்னையும் உண்டு
பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு
இப்போது