Podhigai Malai Saralile

Podhigai Malai Saralile Song Lyrics In English




பொதிகை மலை சாரலிலே பூவொன்று பூத்திருக்கு பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ

அருவியிலே நான் குளிக்க அருகினிலே நீயிருக்க கார்க்குழலாள் கண்ணசைத்தால் உன் தேகம் பாய் விரிக்கும்

மாங்கனியில் சுவையிருக்க பூங்கொடியை நீயணைக்க ஊர்வசியோ மேனகையோ யாருமில்லை எனக்கீடு

பொதிகை மலை சாரலிலே பூவொன்று பூத்திருக்கு பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ


மைவிழிகள் தான் சிவக்க மயக்கத்திலே நான் மிதக்க மன்மதனின் லீலைகளை மஞ்சத்திலே நான் படிக்க

பார்வையிலே ஆயிரந்தான் அர்த்தங்களை காணுகிறேன் என்னோடு நீயிருந்தால் கனவுகளும் நிறைவேறும்

பொதிகை மலை சாரலிலே பூவொன்று பூத்திருக்கு பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ ஓஓ