Podhum Podhum Poda

Podhum Podhum Poda Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

போதும் போதும் போடா போடா நீதான் யாரோ நேரில் வாடா நூலினில் ஆடும் பொம்மையும் நானா தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா நாடி ஒரு கோடி முறை துடிக்குது ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ

போதும் போதும் போடா போடா நீதான் யாரோ நேரில் வாடா

தூக்கம் என்பது கண்ணை விட்டது துன்பம் என்பது நெஞ்சை தொட்டது பூர்வ ஜென்ம பாவம் என்று சொல்லலாமோ பாவியே நீ மறைந்திருந்தே கொல்லலாமோ

எங்கிருந்தோ ஏவி விட்ட அம்பு தானோ விலை கொடுத்து வாங்கிடாத வம்பு தானோ கடவுள் செய்த லீலை தானோ மனிதன் செய்த வேலை தானோ ஆக மொத்தம் இந்த நெஞ்சில் அமைதியில்லை ஏன்

போதும் போதும் போடா போடா நீதான் யாரோ நேரில் வாடா நூலினில் ஆடும் பொம்மையும் நானா தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா நாடி ஒரு கோடி முறை துடிக்குது ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ


ஊர் புகழ்ந்திடும் கலைஞன் அல்லவா நான் தவித்திடும் கதையை சொல்லவா கற்பனைகள் சிந்தனைகள் ஓடவில்லை கேமராவும் சொன்ன பேச்சை கேட்கவில்லை

நேற்று வரையில் இந்த நெஞ்சில் அச்சமில்லை சேர்த்து வைத்த வீரமின்று மிச்சமில்லை காலம் செய்த கோலம் தானோ தவறி போன தாளம் தானோ கேள்வி மட்டும் இங்கிருக்கு விடைகளில்லை ஏன்ஏன்

போதும் போதும் போடா போடா நீதான் யாரோ நேரில் வாடா நூலினில் ஆடும் பொம்மையும் நானா தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா நாடி ஒரு கோடி முறை துடிக்குது ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ

போதும் போதும் போடா போடா நீதான் யாரோ நேரில் வாடா