Pogadhey – Nadhi |
---|
பாடகி : அணிலா ராஜிவ்
பாடல் ஆசிரியர் : தாமரை
போகாதே நெஞ்சே உன்னை கெஞ்சி கேட்கிறேன் போகாதே நீ போகாதே
பாராதே கண்ணே உன்னை மூட சொல்கிறேன் பாராதே ஓ பாராதே
சிறகுகள் விரிந்து வான் நோக்கி மேலே போவதென்ன கவலைகள் கலைந்து காற்றோடு காற்றாய்ப் போனதென்ன
என் வெள்ளை உள்ளத்திலே ஒரு கள்ளம் கால் வைக்குதே ஓ என்றாலும் பொல்லாத இன்பம் உள் ஊறுதே
வானவில்லை காணவில்லை வண்ணம் ஏழும் போதவில்லை ஓவியங்கள் வாடலாமா
தென்றல் ஒன்றை காணவில்லை தேடி வந்த காற்றின் சொல்லை உண்மையென்று நம்பலாமா
மின்னல் கோலம் வான் எங்கும் மஞ்சள் மேகம் தேன் சிந்தும் கண் திறந்து பார்த்தால் சொப்பனம்
அன்னை போல நீ வந்தாய் அன்பை அள்ளி ஏன் தந்தாய் கண்மூடும் போதெல்லாம் உன் முகம்
கால்கள் இன்று மண்ணில் இல்லை பாதம் ரெண்டும் பாவ வில்லை வானம் தானே தீண்டும் எல்லை
கைகள் இங்கே கைகள் இல்லை கட்டுப்பட்டு நிற்கவில்லை கட்டி கொள்ளும் ஆசை தொல்லை
போகாதே நெஞ்சே உன்னை கெஞ்சி கேட்கிறேன் போகாதே நீ போகாதே
பாராதே கண்ணே உன்னை மூட சொல்கிறேன் பாராதே ஓ பாராதே
சிறகுகள் விரிந்து வான் நோக்கி மேலே போவதென்ன கவலைகள் கலைந்து காற்றோடு காற்றாய்ப் போனதென்ன
என் வெள்ளை உள்ளத்திலே ஒரு கள்ளம் கால் வைக்குதே ஓ என்றாலும் பொல்லாத இன்பம் உள் ஊறுதே
வானவில்லை காணவில்லை வண்ணம் ஏழும் போதவில்லை ஓவியங்கள் வாடலாமா
தென்றல் ஒன்றை காணவில்லை தேடி வந்த காற்றின் சொல்லை உண்மையென்று நம்பலாமா