Pogum Vazhigal |
---|
பாடகர் : அந்தோணி தாசன்
லாலா லாலா லாலா(4)
போகும் வழிகளெங்கும் தாகம் தீர்க்கும் சோலை நான் வாழும் மலைகள் எங்கும் அருவி பாடும் கீதம் நான்
அடுத்ததை எண்ணாமல் கிடைப்பதை புசித்திங்கே அனுதினம் பசி களைப்பாறுவேன்
காணும் காட்சியில் யாவும் மாறுதே வாழ்வின் மாயம் என்ன
நோக்கம் நீங்கியே ஏக்கம் இன்றியே வாழும் விந்தை நானே
நேற்றின் எண்ணங்கள் மாற்று வண்ணங்கள் பேசும் மின்னல் நானே
நீரில் நில்லுங்கள் வானில் செல்லுங்கள் யாவும் உண்மை தானே
ஓடும் பட்சியின் பாதை செல்லுங்கள் போகும் சொர்க்கம் தானே
காற்றை நீக்கியே பாட்டை பாடுங்கள் கூச்சல் ராகம் தானே
ஹாஹாஹா
வெயில் சிரிப்பிலே எனை திறக்கிறேன் மழை துளியிலே எனை துறக்கிறேன்
நேற்றின் நதி யாவுமே நாளை மடை மாறலாம் கனவின் நிஜம் யாவுமே காற்றில் விடை தேடலாம்
நீளும் மலையாகிறேன் வீழும் விதையாகிறேன் வேர்கள் எனை தேடலாம் வெறும் காற்றில் புயல் சேரலாம்
காடாய் பெருங்காடாய் வாராய் நீ வாராய்
இருளினை பழகிடும் போது மறைந்தவை முளைத்திடும் தோழா கதவுகள் திறந்திடும் போது கடல் ஒன்று அழைத்திடும் வா வா
அடுத்தை எண்ணாமல் கிடைப்பதை புசித்திங்கே அனுதினம் பசி களைப்பாறுவேன்
காணும் காட்சியில் யாவும் மாறுதே வாழ்வின் மாயம் என்ன
வாழும் சட்டங்கள் வாழ்வின் வட்டங்கள் யாவும் மீள்வதென்ன
நியாயம் இன்றியே நியாயம் ஒன்றையே நீங்கள் காண்பதென்ன
மாறும் ஒன்றிலே நாமும் ஒன்றென சேர்ந்தால் இன்பம் தானே
ஹாஹாஹா