Poonthendrale (Solo)

Poonthendrale (Solo) Song Lyrics In English


ம்ஹ்ம்ம்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம்ம்ம் நான நான்ன நான்னானா

பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம் கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்

பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா

தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன் நீதானே என் காலைகளின் சூர்யோதயம்ம் தாங்காமல் பெண் உனை தாலாட்டு கேட்கிறேன் நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்ம்

ஓ பிரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள் நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள் அன்பே உன் வாசகம்என் ஜீவ யாசகம் கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன்

பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா


ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது நீ பாடினால் பூவானது தேனானது நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது

பூலோக சொர்க்கம் கண் முன்னே நான் காண்கிறேன் நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில் நான் வாழ்கிறேன் காலங்கள் மாறினும்தேகங்கள் போயினும் காதல் அழியாது அது நாளும் வாழும் உன் வசம்

பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம் கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்

பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா