Poovadaikkari Aval Kaval

Poovadaikkari Aval Kaval Song Lyrics In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்

பூவாடைக்காரி அவள் காவல் இருக்கிறாள் பொண்ணுகளைக் காக்கத்தானே கோவிலிருக்கிறாள் பூவாடைக்காரி அவள் காவல் இருக்கிறாள் பொண்ணுகளைக் காக்கத்தானே கோவிலிருக்கிறாள் சமயபுரம் மாங்காடு பெரியபாளையம் தங்கியுள்ள பக்கம் எங்கும் தர்மம் காக்கிறாள்

பூவாடைக்காரி அவள் காவல் இருக்கிறாள் பொண்ணுகளைக் காக்கத்தானே கோவிலிருக்கிறாள்

ஏரு ஓடாட்டி தண்ணீர் ஊற்றுவா யாரும் வந்தாக்க கருணை காட்டுவா வேப்பிலைக் கட்டு நெற்றியிலே சந்தனமிட்டு உந்தன் வேதனையெல்லாம் மாரியம்மன் பேர்ல விட்டு

தாலி கேட்டாக்க தேதியைச் சொல்லுவா தாயே என்றாலோ தாயாக ஆக்குவா வேப்பிலைக் கட்டு நெற்றியிலே சந்தனமிட்டு உந்தன் வேதனையெல்லாம் மாரியம்மன் பேர்ல விட்டு

சேரநாடு சோழ நாடு பாண்டிய நாடு மூணு முடி தாங்கி அவள் ஆள்வது பாரு உமையவளின் மறுவடிவம் ருத்ர தாண்டவம் உண்மை சொன்னா நன்மை செய்தல் அவளின் நாடகம்

பூவாடைக்காரி அவள் காவல் இருக்கிறாள் பொண்ணுகளைக் காக்கத்தானே கோவிலிருக்கிறாள்

பெண்ணை பழிச் சொன்னால் கண்ணை எடுப்பா புத்தி வந்தாக்க நெஞ்சில் இருப்பா பாலில் வெண்ணெய் போல் பதுங்கி இருப்பா காலம் வந்தாளே கண்ணில் இருப்பா

அக்கா தங்கச்சி ஏழு பேர் அவதரித்தாங்க அகிலமெல்லாம் கோவிலில் ஆள வந்தாங்க


பொன்னழகி மலையரசி பூமாலை அம்மா பூமியெல்லாம் என்னவாகும் அவளில்லையின்னா சிறு குடிசையிலே இருந்து கொண்டு உலகம் காப்பவ தினம் கொட்டு மேளம் கொட்டி வந்து கலகம் தீர்ப்பவ

பூவாடைக்காரி அவள் காவல் இருக்கிறாள் பொண்ணுகளைக் காக்கத்தானே கோவிலிருக்கிறாள்

அம்மா நெருப்புத்தான் மண்ணில் எரியுது அடியைப் பார்த்து வை கண்ணில் தெரியுது

தண்ணியைப் போலே அந்தத் தீயிலே தள்ளி ஒன்னைத் தாங்கி நிக்கிறா அம்மா ஆனந்தவல்லி

பஞ்ச பூதம் அஞ்சும் அவளிடம் போடி போடி நீ நியாயம் உன்னிடம் சத்தியமா உன்னை எண்ணி தீயை மிதிச்சா தருமத்தையே நெஞ்சில் எண்ணி காலடி வச்சா

இன்று புதியவளாய் பொறந்து வந்த சீதையை பாரு பொட்டும் பூவும் காத்து நிற்கும் தேவியைப் பாரு மாரியம்மா முத்து மாரியம்மா தாயே மாரியம்மா முத்து மாரியம்மா தாயே அம்மா

மாரியம்மா முத்து மாரியம்மா தாயே மாரியம்மா முத்து மாரியம்மா தாயே மாரியம்மா முத்து மாரியம்மா தாயே மாரியம்மா முத்து மாரியம்மா தாயே