Porumai Orunaal Pongi

Porumai Orunaal Pongi Song Lyrics In English


இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

ஏனென்று கேட்கவே ஆளில்லை என்பதாலே தானென்ற அகங்காரம் தலைவிரித்து ஆடுதடா ஊனுருக ஏழைகளின் உள்ளமெல்லாம் புண்ணாக உயிரோடு கொல்பவனைக் காலம் உயர்வாய் மதிக்குதடாஆஅ

பொறுமை ஒருநாள் பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா கொடுமை புரியும் பாதகனை அவன் குறைகள் விழுங்குமடா கொடுமை புரியும் பாதகனை அவன் குறைகள் விழுங்குமடா

பொறுமை ஒருநாள் பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா

காலையாகி மதியமாகி மாலையானது பல பொழுது, மாலையாகி பகலும் முடிந்து இருளும் போனது பல இரவு ஞாலம் முழுவதுமே ஆள்கின்ற கதிரோன் வாழ்வெல்லாம் ஒரு நாள் வாழ்வென்றதால் தினம் தீராத வெறியோடு போராடும் மனிதன் பேராசை நிலைதனை என்னென்று சொல்வேன்!


பொறுமை ஒருநாள் பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா

மானம் என்றே மங்கை அழுதால் இன்பமென்றே நகைப்பானே வால வயதில் செய்த வினையை வாழ்வு முடிவில் நினைப்பானே

தானாகச் சிரிப்பான் தானாக அழுவான் காணாத கனவும் காண்பானே அவன் ஆனந்த வாழ்வென்று ஈனங்கள் தேடித் கூனாகி ஊனாகிக் கூடாகிப் போவானே

பொறுமை ஒருநாள் பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா கொடுமை புரியும் பாதகனை அவன் குறைகள் விழுங்குமடா