Puratchi Thalaivarai Ninaithale

Puratchi Thalaivarai Ninaithale Song Lyrics In English


ஏஎஹேஹேஏ ஆஹாஆஆஹஹா

புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா

மருட்சியிலே மனம் மயங்கிடும் கோழைக்கு மானம் பிறக்குதடா மருட்சியிலே மனம் மயங்கிடும் கோழைக்கு மானம் பிறக்குதடா

புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா

பொதுத்தொண்டு உன்னாலே புனிதமானது இந்த பூமியிலே உனது தியாகம் புதுமையானது பொதுத்தொண்டு உன்னாலே புனிதமானது இந்த பூமியிலே உனது தியாகம் புதுமையானது

நீ காசு பணம் இல்லாமல் கடமை ஆற்றினாய் நீ காசு பணம் இல்லாமல் கடமை ஆற்றினாய் ஒரு மாசு மருவில்லாமல் வாழ்ந்து காட்டினாய்

புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா

கொள்கைக்காக நானும் என் உயிரையும் கொடுப்பேன் நாட்டை கொள்ளையடிக்கும் கூட்டத்தின் முகமூடியை கிழிப்பேன்


கொள்கைக்காக நானும் என் உயிரையும் கொடுப்பேன் நாட்டை கொள்ளையடிக்கும் கூட்டத்தின் முகமூடியை கிழிப்பேன்

அவர் கோபுரத்தில் இருந்தாலும் விடமாட்டேன் கூடு விட்டு கூடு பாய்ந்தாலும் விடமாட்டேன் விடமாட்டேன்

புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா

சட்டங்களால் திருந்தாத மனிதர்களை இங்கே தட்டிக் கேட்க இதுவரைக்கும் ஆட்கள் இல்லை சட்டங்களால் திருந்தாத மனிதர்களை இங்கே தட்டிக் கேட்க இதுவரைக்கும் ஆட்கள் இல்லை

இன்று திட்டமிட்டு ஒரு தலைவன் தந்த இலை திட்டமிட்டு ஒரு தலைவன் தந்த இலை நாட்டின் கெட்ட நிலை போக்க வந்த இரட்டை இலை இரட்டை இலை இரட்டை இலை இரட்டை இலை

புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா