Saamikaley Saamikaley

Saamikaley Saamikaley Song Lyrics In English


சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க

உள்ளதச் சொன்னா குத்தமில்ல உள்ளத்தில் இங்கே கள்ளம் இல்ல

வழக்க தீத்து வைய்யி ஒரு விளக்க ஏத்தி வைய்யி இந்த வழக்க தீத்து வைய்யி ஒரு விளக்க ஏத்தி வைய்யி

சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க

கண்ணாடி மாளிகையா நான் இருந்தேன் இங்கே கல்லெடுத்து வீசிப் புட்டா மாலை இட்ட மங்கை தோள் மீது ஊஞ்சல் கட்டி நான் வளர்த்த தங்கை சொல்லாலே தீ எறிய பொங்குதம்மா கங்கை

அடி பட்ட பந்தாக ஆகி விட்டேன் இப்போது மிதி பட்ட பூஞ்சோல இடி விழத் தாங்காது

சொந்தம் என்பது பொய்யடா பந்தம் என்பதும் பொய்யடா பாசம் என்பது நோயடா வாட வைக்கிற தீயடா ஒன்று பட்டது சென்று விட்டது ரெண்டு பட்டது வாழ்வே

சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க


நிலவினில் களங்கம் என்று சொன்னவங்க யாரு சொன்னவங்க வார்த்தையில உண்மை உண்டா கூறு சந்திரனும் தேய்வதென்று சொன்னவங்க யாரு தேய் பிறையும் வள்ர் பிறையும் சந்திரனில் ஏது

தண்ணிக்குள்ளே எந்நாளும் தாமரைப் பூ நின்றாலும் தண்ணி அதில் ஒட்டாது உண்மை என்றும் பொய்க்காது வீண் பழிகள் சொல்லவே ஆள் இருந்தா போதுமே பத்தினியான போதிலும் பாவம் வந்து சேருமே காலம் என்கிற தேவன் கையிலே ஆடும் பம்பரம் நாமே

சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க

உள்ளதச் சொன்னா குத்தமில்ல உள்ளத்தில் இங்கே கள்ளம் இல்ல

வழக்க தீத்து வைய்யி ஒரு விளக்க ஏத்தி வைய்யி இந்த வழக்க தீத்து வைய்யி ஒரு விளக்க ஏத்தி வைய்யி

சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க