Sangathamizh Kaviye |
---|
பாடகர்கள் : கே எஸ் சித்ரா மற்றும் கே ஜே யேசுதாஸ்
பாடலாசிரியர் : வாலி
சங்கத் தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
சங்கத் தமிழ்க் கவியே! சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ சங்கத் தமிழ்க் கவியே ஏஏஏஏ
மாதுளம் பூவிருக்க அதற்குள் வாசனைத் தேனிருக்க பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க
காதலன் கண்ணுறங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க ஒரு புறம் நான் அணைக்க ஆஆஆஆஆஆஆ,,,,, ஒரு புறம் நான் அணைக்க தழுவி மறுபுறம் நீ அணைக்க
சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான் சங்கத் தமிழ்க் கவியே சங்கத் தமிழ்க் கவியே
பூங்குயில் பேடைத்தனைத் சேரத்தான் ஆண் குயில் பாடியதோ ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ
காதலன் கைத்தொடத்தான் காதலன் கைத்தொடத்தான் இந்தக் கண்களும் தேடியதோ
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன் நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன் தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம் தினம் நான் தவித்தேன்
சங்கத் தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
சங்கத் தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ சங்கத் தமிழ்க் கவியே ஏஏஏஏஏ