Sangeetha Poo Mazhaiye

Sangeetha Poo Mazhaiye Song Lyrics In English


பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே ஒரு நோயால் என்று மனம் வாடி நின்றேன் மருந்தும் நீ தானே நோயைத் தீர்க்க நீ வா மருந்தும் நீ தானே நோயைத் தீர்க்க நீ வா

சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலியா கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு விருந்தும் நான் ஆவேன் நோயைத் தீர்க்கும் மருந்தாவேன் விருந்தும் நான் ஆவேன் நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்

சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே

மார்கழிப் பனியினிலே நல்லதோர் மோகம் கூடுதடி மாந்தளிர் மேனி தொட்டால் அது தானாக ஓடுதடி

பாவை என்றால் ஒரு வேலி உண்டு அதைத் தாண்டாதே ஆசையினால் பூ மாலையை நீ சூடும் அன்று சுகம் தேனாகத் தேடி வரும்

காத்திருந்து காத்திருந்து கண்கள் ரெண்டும் பூத்ததும் என்ன ஆகாது ஆகாது வேகம் கூடாது


சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே

காய் ஒன்று கனியாமல் அதை சுவைக்கின்ற ஆசை என்ன கல்யாணம் ஆகாமல் என்னைப் பெண்டாள நினைப்பதென்ன

ஆசை வந்தால் அங்கு வெட்கம் ஏது என்றும் நீ தானே என் சொந்தம் மாலை என்றும் ஒரு வேலி என்றும் என்னை வாட்டாமல் கொண்டாடு

மோகம் என்னும் தீயில் உந்தன் மூளை கொஞ்சம் மாறியதென்ன தீராது தீராது நோயும் தீராது

சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலியா கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு விருந்தும் நான் ஆவேன் நோயைத் தீர்க்கும் மருந்தாவேன் விருந்தும் நான் ஆவேன் நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்

சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே