Seethavin Aatharam |
---|
சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே ஊராரும் வேறாரும் இல்லாதவள் உனையன்றி திசை மாறி செல்லாதவள்
சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே
ஒரு குடையில் நின்று இரு கிளிகள் இன்று காதலின் ராஜ்ஜியம் ஆளுதம்மா வான் முகில் தான் பூச்சொரிய ஊர்வலமாய் போகுதம்மா
நனைந்தது கண்ணாடி மேனி நானதில் கண்டேனே பாதி
சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே
ரதி மதனும் மெல்ல ரகசியங்கள் சொல்ல காலமும் நேரமும் வாய்ந்ததம்மா காய்ந்திருந்த பூமியிலே நீர் விழுந்த வேளையிது பொழிந்தது காரக்கால மேகம் குளிர்ந்தது கண்ணா என் தேகம்
சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே
மணவறையின் கோலம் வரும்வரையில் நீயும் மன்மதன் மந்திரம் பேசுவதோ சாகசமும் சாரசமும் பாவையரின் சீதனமோ பிறந்தது பெண்ணோடு நாணம் எனக்கதில் பொல்லாத கோபம்
சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே ஊராரும் வேறாரும் இல்லாதவள் உனையன்றி திசை மாறி செல்லாதவள் உனையன்றி திசை மாறி செல்லாதவள்