Sirithai Antha Siripil |
---|
சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம் அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம் கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம் கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்
சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன் அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன் கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன் கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன்
சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
உங்களின் அன்பு நினைவினிலே என் மனம் வாழும் உலகினிலே கண்களின் ஜீவ ஒளியினிலே சொர்க்கம் தோன்றுமோ
தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம் தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம் அழகின் மடியில் வசந்தம் மலரும் அழகின் மடியில் வசந்தம் மலரும் அத்தான்
சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
குங்கும கோலம் முகத்தினிலே மங்கள தாலி கழுத்தினிலே சந்தன பேழை அழகினிலே தெய்வம் மயங்குமோ
காலமே ஓடி வா காவியம் பாடி வா காலமே ஓடி வா காவியம் பாடி வா உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம் உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம் அன்பே
சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன் அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன் கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம் கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்
இருவர் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்