Suthanthira Bhoomiyil |
|---|
ஓஹோஹோ
ஆஹாஹாலலல லால்லா
சுதந்திர பூமியில்
பல வகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
சுதந்திர பூமியில்
பல வகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்
சுதந்திர பூமியில்
பல வகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
மங்கையின் கூந்தலில்
மலர்கள் இருந்தால்
மங்கல மங்கை என்போம்
மங்கையின் கூந்தலில்
மலர்கள் இருந்தால்
மங்கல மங்கை என்போம்
மனிதனின் வாழ்க்கையில்
நாணயம் இருந்தால்
மனிதருள் மாணிக்கம் என்போம்
பன்னிரண்டாண்டில் ஒரு முறை மலரும்
குறிஞ்சி மலர்களைப் போலே
தன்னலம் இல்லா தலைவர்கள் பிறப்பார்
ஆயிரத்தில் ஒரு நாளே
சுதந்திர பூமியில்
பல வகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்
மணம் உள்ள மலர்களில்
தேனீ கூடும்
வண்டுகள் இன்னிசை பாடும்
மணம் உள்ள மலர்களில்
தேனீ கூடும்
வண்டுகள் இன்னிசை பாடும்
திறமை உள்ளவன் எங்கிருந்தாலும்
தேசம் அவனிடம் ஓடும்
எல்லா மலரும் இறைவன் படைப்பு
உலகம் அவனது தோட்டம்
தோட்டம் அனைத்தும் எனக்கே சொந்தம்
என்பது சுயநலக் கூட்டம்
ஹோஹோஹோலாலலாலலல லால்லா
இலைகள் மறைத்தும்
மணத்தைப் பரப்பும்
பெருமை உடையது முல்லை
இலைகள் மறைத்தும்
மணத்தைப் பரப்பும்
பெருமை உடையது முல்லை
ஒருவன் புகழை ஒருவன் மறைத்து
உயரும் வரலாறில்லை
சூரியன் போகும் திசையினில் எல்லாம்
வளையும் சூரியகாந்தி
நேரிய வழியில் நிதமும் நடந்தால்
நெஞ்சுக்கு நிம்மதி சாந்தி
சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்
ஹோ ஹோஹோயாயாயா லலல லால்லா