Thai Madiyae |
|---|
தாய் மடியே
உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக
வாடுகிறேன்
பத்து திங்கள்
என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம்
தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த
என் உடம்பு நடு தெருவில்
கிடக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும்
காயங்களில் என் உயிரும்
ஒழுகும் உன்னை வாா்த்தாயோ
தெய்வங்கள் இங்கில்லை
உன்னை அழைக்கிறேன்
தாய் மடியே
உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக
வாடுகிறேன்
விண்ணை இடிக்கும்
தோள்கள் மண்ணை அளக்கும்
கால்கள் அள்ளி கொடுத்த
கைகள் அசைவில்
வந்ததென்ன
கானல்கள் தின்னும்
கண்கள் கனிந்து நிற்கும்
இதழ்கள் உதவி செய்யும்
பார்வை உயிர் குறைந்ததென்ன
பாரத போர்கள்
முடிந்த பின்னாலும்
கொடுமைகள் இங்கே
குறையவில்லை ஏசுகள்
என்றோ மாண்ட பின்னாலும்
சிலுவைகள் இன்னும்
மறிக்கவில்லை
தாய் மடியே
உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக
வாடுகிறேன்
படை நடத்தும்
வீரன் பசித்தவர்கள்
தோழன் பகைவருக்கும்
நண்பன் படும் துயரம்
என்ன
தாய் பாலாய்
உண்ட ரத்தம் தரை
விழுந்ததென்ன
இவன் பேருக்கேற்ற
வண்ணம் நிலம்
சிவந்ததென்ன
தீமைகள் என்றும்
ஆயுதம் ஏந்தி தேர்களில்
ஏறி வருவதென்ன தர்மங்கள்
என்றும் பல்லக்கில் ஏறி
தாமதமாக வருவதென்ன
தாய் மடியே
உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக
வாடுகிறேன்
பத்து திங்கள்
என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம்
தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த
என் உடம்பு நடு தெருவில்
கிடக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும்
காயங்களில் என் உயிரும்
ஒழுகும் உன்னை வாா்த்தாயோ
தெய்வங்கள் இங்கில்லை
உன்னை அழைக்கிறேன்
