Thean Unnum Vandu |
---|
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓஓஓஓ பூங்கொடியே நீ சொல்லுவாய்
வீணை இன்ப நாதம் எழுந்திடும் விநோதம் விரலாடும் விதம் போலவேஏஏ காற்றினிலே தென்றல் காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய் புதுமை இதில்தான் என்னவோஓஓஓ புதுமை இதில்தான் என்னவோ
மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு மென்காற்றே நீ சொல்லுவாய்ஓஓஓ மென்காற்றே நீ சொல்லுவாய்
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓஓஓஓ பூங்கொடியே நீ சொல்லுவாய்
கான மயில் நின்று வான் முகிலைக் கண்டு களித்தாடும் விதம் போலவேஏஏ கலையிதுவே வாழ்வின் கலையிதுவே கலகலெனும் மெல்லிய பூங்காற்றே காணாததும் ஏன் வாழ்விலேஓஓஓ காணாததும் ஏன் வாழ்விலே
இருவர் : கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ கலைமதியே நீ சொல்லுவாய் ஓஓஓ இருவர் : கலைமதியே நீ சொல்லுவாய் ஓஓஓஓஓஓ