Then Kuyil Pole |
---|
தேன் குயில் போலே இசை பாடும் கலா ராணி ஜீவ வீணை நான் தேவ கானம் நீ
தேன் குயில் போலே இசை பாடும் கலா ராணி ஜீவ வீணை நான் தேவ கானம் நீ
வான்மதி போலே எழில் மேவும் கலை மன்னா வாழ்வில் கீதம் நான் நாத வெள்ளம் நீ
வான்மதி போலே எழில் மேவும் கலை மன்னா வாழ்வில் கீதம் நான் நாத வெள்ளம் நீ
புன்னகை தவழும் பூவிதழ் விரியும் புன்னகை தவழும் பூவிதழ் விரியும் புதுமையை கண்டே ஆனந்தம் கொண்டேன் புதுமையை கண்டே ஆனந்தம் கொண்டேன் கண்மணியாளே கண்ணொளி மேவும் காந்த சக்தியால் கவர்ந்தாய் காதல் போதையை அளித்தாய் வாழ்வில் என்றுமே மகிழ்வோம்
தேன் குயில் போலே இசை பாடும் கலா ராணி ஜீவ வீணை நான் தேவ கானம் நீ
தீங்குளிர் பார்வை தன்னில் நானே தீங்குளிர் பார்வை தன்னில் நானே தென்றலைக் கண்டேன் பேரின்பம் கொண்டேன் தென்றலைக் கண்டேன் பேரின்பம் கொண்டேன் தெள்ளிய அமுதே என் மனம் வாழும் தேவராஜனே தெள்ளிய அமுதே என் மனம் வாழும் தேவராஜனே இனி நாம் கலந்தே வாழ்விலே என்றுமே மகிழ்வோம்
வான்மதி போலே எழில் மேவும் கலை மன்னா வாழ்வில் கீதம் நான் நாத வெள்ளம் நீ