Then Madurai Vaigai Nadhi (Sad) |
---|
தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தேய்கின்றது தேய்கின்றது
பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே
வாழும் பாசம்
தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை
நதி
பிள்ளை போல
என்னை இங்கே கையில்
ஏந்தும் தெய்வம் எங்கே
அண்ணன் நல்ல தந்தை
நீயே என்னை காத்து நீ
சென்றாயே
கங்கை போல
கண்ணீர் கொண்டு
மங்கை நீயும் நின்றாய்
இங்கே அன்னை போல
உன்னை பார்த்தேன்
அண்ணி உந்தன் கண்ணீர்
தீர்ப்பேன்
அண்ணன் வழி
நம் பாதை அண்ணன்
மொழி நம் கீதை அண்ணன்
உயிர் நம்மோடு என்றும்
வரும் பின்னோடு நம்
நேசம் பாசம் நாளும்
வாழ்க
தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை
நதி
தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தேய்கின்றது
பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே
வாழும் பாசம்
தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை
நதி