Thiruvilakku Veettukku Alangaram |
---|
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம் திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம் திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
திருவிழா ஊருக்கெல்லாம் சிங்காரம் திருவிழா ஊருக்கெல்லாம் சிங்காரம் நம் திருநாட்டின் பெருமைக்கு இதுவேதான் ஆதாரம்
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம் திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
இல்லறமே நல்லறமாய் வாழுங்க இல்லறமே நல்லறமாய் வாழுங்க என்ற வள்ளுவரை வாசுகியை பாருங்க இல்லறமே நல்லறமாய் வாழுங்க என்ற வள்ளுவரை வாசுகியை பாருங்க தெள்ளமுதாம் நீதி மொழி தன்னையேஏஓ தெள்ளமுதாம் நீதி மொழி தன்னையே நமக்கு அள்ளி தந்த பாட்டி இந்த ஒளவையே
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம் திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
சதிபதிகள் இணைந்தது சம்சாரமே சதிபதிகள் இணைந்தது சம்சாரமே அதில் தனிமை வந்தால் இன்ப நிலை மாறுமே சதிபதிகள் இணைந்தது சம்சாரமே அதில் தனிமை வந்தால் இன்ப நிலை மாறுமே எனும் தத்துவத்தை சொன்ன வேத நாயகன் எனும் தத்துவத்தை சொன்ன வேத நாயகன் சொல்லின் நித்தியத்தை உணர வேண்டும் யாருமே
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம் திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்