Ubakaram Seibavarukke |
---|
பாடகர் : டி எம் சௌந்தர்ராஜன்
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
உபகாரம் செய்தவர்க்கே அபகாரம் செய்ய எண்ணும் முழு மோசக்காரன் தானே முடிவிலே நாசமாவான் ஆ ஆ ஆ
அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே எண்ணம் கொண்ட பாவிகள் மண்ணாய் போக நேருமே
அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே எண்ணம் கொண்ட பாவிகள் மண்ணாய் போக நேருமே
வேஷம் கண்டு மயங்கியே வீணாக ஆசை கொண்டு மோசமும் போன பின்னால் மனவேதனை அடைவதாலே லாபம் என்ன
பாலை ஊற்றி பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே கடிக்கத்தானே வரும் அதை அடித்து கொல்ல நேருமே
பாலை ஊற்றி பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே கடிக்கத்தானே வரும் அதை அடித்து கொல்ல நேருமே
அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே எண்ணம் கொண்ட பாவிகள் மண்ணாய் போக நேருமே