Ullasamagave Ellorum Kanave |
---|
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
உல்லாசமாகவே எல்லோரும் காணவே கல்யாணமாக வேண்டுமே ஒன்றாய்ச் சேரும் நாளை உன் சொல்லால் இந்த வேளை உள்ளம் கண்டு இன்பம் கொண்டு ஆடிப்பாடுதே
உல்லாசமாகவே எல்லோரும் காணவே கல்யாணமாக வேண்டுமே
உன் சல்லாபப் பூமாலை நான் என் சந்தோசம் உன் கையில் தான் உன் அன்பே என் இன்பம் என் வாழ்வின் அமுதம் உலகம் நமது உறவை உணரவே
ஹோஓஹோஓ ஹோ உல்லாசமாகவே எல்லோரும் காணவே கல்யாணமாக வேண்டுமே
உன் அன்புள்ளம் மாறாமலே என் ஆனந்தம் குறையாமலே உன் காதல் என் மீதில் நம் வாழ் நாளில் வளர உலகம் நமது உறவை உணரவே
ஹோஓஹோஓ ஹோ உல்லாசமாகவே எல்லோரும் காணவே கல்யாணமாக வேண்டுமே