Unnai Ethirparthen Kanna

Unnai Ethirparthen Kanna Song Lyrics In English


 பாடல் ஆசிரியர் : வாலி

கண்ணாகண்ணாகண்ணா கண்ணாகண்ணாகண்ணா கண்ணாஆஆஆஆ

உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும் உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும் இங்கே ஏங்குகிறேன் தனியாக

உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா

உந்தன் முகம்தானே பசியாற நான் பார்த்தது உந்தன் மனம்தானே வரமாக நான் கேட்டது உடல் என்னோடுதான் உயிர் உன்னோடுதான் இன்னும் வேறென்ன நான் சொல்வது

கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம் எந்தன் உறவென்னும் உலகங்கள் நீ தந்தது இதில் பிரிவென்னும் ஒரு துன்பம் ஏன் வந்தது


உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா

தினம் தேய்ந்தாலும் பிறை கூட நிலவாகுமே மலர் காய்ந்தாலும் பிஞ்சாகி கனியாகுமே உடல் தேய்கின்றதே மனம் காய்கின்றதே இந்த நிலை மாற நீ வேண்டுமே

பெண் பாவம் பொல்லாது கண்ணா வா இப்போது உன் விளையாட்டை நான் தாங்க முடியாதய்யா நீ வாராமல் பொழுதிங்கு விடியாதய்யா

உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா