Unnai Kandu Mayangadha

Unnai Kandu Mayangadha Song Lyrics In English




உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ- பணமே உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ கலிக்காலத்திலே கண்கண்ட தெய்வமே உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ

ஞாலத்திலே நீ செய்யும் ஜாலத்திலே ஞாலத்திலே நீ செய்யும் ஜாலத்திலே உன் பிராதபத்திலே லீலா விநோதத்திலே உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ

பணமேபணமேபாதகா பணமே மாபாதகா பணமே நீ மா பாதகா பணமே நி சா நி த நி மா பாதகா பணமே பாதகா மா பாதகா நீ மா பாதகா நி சா நி ச நி மா பாதகா பணமே உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ

கல்லாதவன் கருணை இல்லாதவன் காமாந்தக்காரன் பொல்லாதவன் பொய்யன் கல்லாதவன் கருணை இல்லாதவன் காமாந்தக்காரன் பொல்லாதவன் பொய்யன் ஆகிய கூட்டத்தில்

நல்லவரை நம்பின பேரை நல்லவரை நம்பின பேரை நாய் போல் உழைப்பவரை நாணயமாய் வாழ எண்ணும் நாணயமாய் வாழ எண்ணும் ஏழையை சிக்க வைத்தே

உள்ளம் துடிக்க கண்ணீர் வடிக்க உள்ளம் துடிக்க கண்ணீர் வடிக்க வேடிக்கை பார்க்கும் வினோதனே உலகில் உனக்கு நிகர் ஏதப்பா பண நாதனே

முட்டாளும் முல்லா கலைஞன் போல பேசுவான் முட்டாளும் முல்லா கலைஞன் போல பேசுவான் சும்மா தொட்டால் நடுங்கும் கோழைக் கூட வாய் வீசுவான் சும்மா தொட்டால் நடுங்கும் கோழைக் கூட வாய் வீசுவான்


பட்டப்பகலில் கொள்ளையடிக்கும் பக்காத் திருடனும் பட்டப்பகலில் கொள்ளையடிக்கும் பக்காத் திருடனும் உன் பார்வையினால் பரம யோக்யன் போலக் காணுவான் உன் பார்வையினால் பரம யோக்யன் போலக் காணுவான்

கட்டிடத்து சத்திரத்து சோம்பேறிக் கூட கட்டிடத்து சத்திரத்து சோம்பேறிக் கூட உன் கிருபையினால் பெரிய மனிதன் ஆகிவிடுகிறான் உன் கிருபையினால் பெரிய மனிதன் ஆகிவிடுகிறான் எல்லாம் உனது மகிமையினாலே நடக்குதப்பா இணையில்லாத மகானு பாவா

அறியாமை பொறாமை பிறரை அடக்கி ஆளும் தன்னை அறியாமை பொறாமை பிறரை அடக்கி ஆளும் தன்னை கர்வம் குறையாமை நிலை உணராமை கர்வம் குறையாமை நிலை உணராமை

இந்த தீமை எல்லாமே செய்திடும் நன்மை தீமை எல்லாமே செய்திடும் நன்மை எங்கும் நிறைந்தவனே எங்கும் நிறைந்தவனே பணம் எனும் ஏகாத்தியபதியானே

மனதை மயக்கும் மாயாஜாலத்தை கை விட்டு மனதை மயக்கும் மாயாஜாலத்தை கை விட்டு மமதை கொள்ளாமல் நான் சொல்வதை நீ கேட்டு மமதை கொள்ளாமல் நான் சொல்வதை நீ கேட்டு

நல்ல மனிதரிடம் நாடு நல்ல மனிதரிடம் நாடு அதனால் நாடு செழித்து நலம் பெறக் கூடும் வல்லவன் நீயானதாலே வல்லவன் நீயானதாலே உலகில் எல்லோருக்கும் பொதுவா இருந்தால் பணமே உனைக் கண்டு உலகில் எல்லோருக்கும் பொதுவா இருந்தால் பணமே உனைக் கண்டு வணங்காத பேர்களுண்டோ