Unnai Oru Kelvi Kettadhu |
---|
உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது கல்யாண மாலைகள் சூட கச்சேரி கீர்த்தனம் பாட அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ
உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
ஆஅஹ் ஹாஹ் ஹா ஆஅஹ் ஹாஹ் ஹா ஆஅஹ் ஹாஹ் ஹாஆ
மாலை பனியில் நனையும் தளிர்கள் முத்தைப் போல் மின்ன மின்ன வாட குளிரும் தளிரும் குலவும் சொந்தந்தான் என்ன என்ன
அம்மாடி ஆசை வந்து என்னை தோண்டத்தான் அஞ்சாறு முத்தம் சிந்த நானும் வேண்டத்தான் அம்மாடி ஆசை வந்து என்னை தோண்டத்தான் அஞ்சாறு முத்தம் சிந்த நானும் வேண்டத்தான் நீ கடை விரிக்க நான் தடை விரிக்க நாணம் விளையும் அல்லவாஆ
உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது கல்யாண மாலைகள் சூட கச்சேரி கீர்த்தனம் பாட அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ
உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது ஆஹஹான்
நான்கு உதடும் உதடும் உரசி மெல்லத்தான் ஒட்டிக் கொள்ளஆஅஆ நீண்ட நினைவும் கனவும் மனதை எங்கெங்கோ இட்டுச் செல்லஆஅஆ
தென்மேற்கு சாரல் பட்டு தேகம் வாடத்தான் உன் கைகள் போர்வை போல என்னை மூடத்தான் தென்மேற்கு சாரல் பட்டு தேகம் வாடத்தான் உன் கைகள் போர்வை போல என்னை மூடத்தான் நான் இணைந்திருக்க நீ இடம் கொடுக்க வாசல் திறக்கும் அல்லவாஆஹ்ஹா
உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது கல்யாண மாலைகள் சூட கச்சேரி கீர்த்தனம் பாட அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோஓ
உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது