Unnai Partha Kangal

Unnai Partha Kangal Song Lyrics In English


உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
ஹாஆஹாஆ
போதும் போதும் என்றேன்
நெஞ்சம் கேட்கவில்லை
ஹாஆஹாஆ

ஒரு தென்றல் போல வந்து
அன்பே என்னை வேர்க்க வைத்தாய்
வள்ளல் போல வாழ்வே
உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்
உன் பேரை நான் சொல்லி
என்னை அழைப்பேன்
உன்னை இன்று நான் தேடி
என்னைத் தொலைத்தேன்

உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
போதும் போதும் என்றேன்
நெஞ்சம் கேட்கவில்லை



அன்பே உன் கூந்தலில்
நான் கலைந்தேன்
நீ வைத்த பூக்களில்
நான் உதிர்ந்தேன்
குழி விழும் கண்ணத்துக்குள்
நான் விழுந்தேன்
சிரு நெற்றி வேர்வையில்
நான் கரைந்தேனே

நேற்று வரை நேற்று வரை
வாழ்வில் ருசி இல்லை
மலரே உந்தன் மடியில் வாழ்ந்தால்
மரணம் இல்லை

உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
ஹாஆஹாஆ
போதும் போதும் என்றேன்
நெஞ்சம் கேட்கவில்லை
ஹாஆஹாஆ


நான் பார்க்கும் வானவில்
வளையல்களில்
நான் கேட்கும் மெல்லிசை
கொலுசுகளில்
சில்லென்ற நட்சத்திரம்
உன் கண்கள்தானோ
பூமத்திய ரேகை
உந்தன் கைகளில்தானோ

என்ன நிறம் என்ன குணம்
காதல் புரியவில்லை
காதல் கவிதை
எதுவும் இன்று தெரியவில்லை

உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
ஹாஆஹாஆ
போதும் போதும் என்றேன்
நெஞ்சம் கேட்கவில்லை
ஹாஆஹாஆ

ஒரு தென்றல் போல வந்து
அன்பே என்னை வேர்க்க வைத்தாய்
வள்ளல் போல வாழ்வே
உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்
உன் பேரை நான் சொல்லி
என்னை அழைப்பேன்
உன்னை இன்று நான் தேடி
என்னைத் தொலைத்தேன்

உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
போதும் போதும் என்றேன்
நெஞ்சம் கேட்கவில்லை