Unnai Thedinen Kannane |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆஆஆஅஆஆ அஅஆஅஆஅஆஆ ஆஆஆஆஅஆ
உன்னைத் தேடினேன் கண்ணனே நானே உன்னைத் தேடினேன் கண்ணனே நானே உன்னைத் தேடினேன் கண்ணனே நானே கனவு காண்கிறேன் ராதையின் கண்களில் சீதையின் வேதனை உன்னைத் தேடினேன்
அந்த நாட்கள் எங்கே கண்ணா முகுந்தா கிருஷ்ணாஆஆஆஆஆ அந்த நாட்கள் எங்கே கண்ணீர் பூக்கள் இங்கே பிருந்தாவனம் அங்கே பேதை நெஞ்சம் இங்கே
கண்ணனே இவள் மனம் உருகுது நினைவுகள் பலதரம் வர ஒரு வரம் பெற உன்னைத் தேடினேன் கண்ணனே நானே உன்னைத் தேடினேன்
ஸககம பதநிபஸ ஸாநிபமக ஸககம பதநிபஸ ஸாநிபமக ஸககம பதநிபஸ ஸாநிபமக ஸககம பதநிபஸ ஸாநிபமக
பார்த்தன் நின்ற தேரில் கீதை சொன்ன கண்ணா பார்த்தன் நின்ற தேரில் கீதை சொன்ன கண்ணா பேதை இன்று செல்லும் பாதை என்ன மன்னா லீலை செய்து அன்று சேலை தந்த கண்ணா
லீலை செய்து அன்று சேலை தந்த கண்ணா விதி இன்று செய்யும் வேலை என்ன மன்னா இல்லையா மனம் தனில் கரிசனம் ஒருமுறை தரிசனம் கொடு
உன்னைத் தேடினேன் கண்ணனே நானே உன்னைத் தேடினேன்
என் மீது கண்ணா ஏன் கோபமோ பூபாளம் கேட்டால் புயல் வீசுமோ ஒரு ஜென்மம் போகும் அதனாலென்ன மறு ஜென்மம் உண்டு இணைந்தாலென்ன
கண்ணனே இளமையில் தனிமையில் தினம் தினம் உருகுது விழி மழை பொழியுது
உன்னைத் தேடினேன் கண்ணனே நானே கனவு காண்கிறேன் ராதையின் கண்களில் சீதையின் வேதனை உன்னைத் தேடினேன் ஆஆஆஆஆஆஆ