Uravugal Oru Sirukadhai |
---|
பாடகர் : எஸ் பி பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வாலி
உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே புடவையில் வந்த தலைவிதி இதுதானே நடந்ததை நீ மறந்து விடு மனக் கதவை திறந்து விடு யம்மம்மாஆஆயம்மா
உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே புடவையில் வந்த தலைவிதி இதுதானே
நானும் மனிதன் தேவன் அல்ல தீர்ப்பு சொல்ல நிலவில் கூட கலங்கமில்லையோ ஆனால் இது என் குற்றமல்ல குறைகள் சொல்ல பாலும் கள்ளும் வெண்மை இல்லையோ
இது யார் தவறோ அடியேன் அறியேன் பனிவாய் மலரே உனை நான் பிரியேன் மூன்று நாட்கள் மெளனமாக என்ன சிந்தனை போதும் போதும் நீ கொடுத்த இந்த தண்டனை யம்மம்மாஆஆயம்மா
உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே புடவையில் வந்த தலைவிதி இதுதானே நடந்ததை நீ மறந்து விடு மனக் கதவை திறந்து விடு யம்மம்மாஆஆயம்மா
உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே புடவையில் வந்த தலைவிதி இதுதானே
நீட்டும் விரல் மேல் கோபம் கொண்டு தாபம் கொண்டு விலகி செல்லும் வீணை இல்லையே வாழும் வரையில் நானும் நீயே நீயும் நானே இமையும் கண்ணும் பகைவரில்லையே
இதுதான் நமக்கு நெடுநாள் உறவு இடிதான் இடித்து விழுமா நிலவு தூரம் வைத்த தாழம்பூவில் வாசம் போகுமா தாரம் தள்ளி நின்றபோதும் பாசம் போகுமா யம்மம்மாஆஆஆயம்மமம்மமா
உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே புடவையில் வந்த தலைவிதி இதுதானே நடந்ததை நீ மறந்து விடு மனக் கதவை திறந்து விடு யம்மம்மாஆஆயம்மா
உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே புடவையில் வந்த தலைவிதி இதுதானே