Vaa Neelanayana |
---|
வா நீ வா நீலநயனா நீ தானே அழகு வதனா மை பூச்சு கண்கள் மீனா கள்ளூறும் உதடு தேனா
ஆ உன் அழகே வான் கொஞ்சும் நிலவே மேகம் தூறிடும் மழையே தேகம் சில்லிடும் இசையே மான் போல் ஓடோடி ஆடிடு
தவமென ஆடை உன் மேனியை தொடவும் ஏங்குதே அழகென வரிகள் சேருதே கவிதையிலே
வா நீ வா நீலநயனா நீ தானே அழகு வதனா மை பூச்சு கண்கள் மீனா கள்ளூறும் உதடு தேனா
கண்களின் ஒளியை இரவினில் பிறையும் திருடுதே செப்பிதழ் மொழியும் தேனென கேட்கிறதே
வா நீ வா நீலநயனா நீ தானே அழகு வதனா மை பூச்சு கண்கள் மீனா