Vaa Ponmayile |
|---|
வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க
வருவாய் சுகம் பெருகப் பெருக
இளமையின் நளினமே
இனிமையின் உருவம் மலர
வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ
பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழகப் பழக
உரிமையில் அழைகிறேன் உயிரிலே கல்ந்து மகிழ
வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
